அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 24

ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை

விடை – மரம்

காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம்

கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?

விடை – கொக்கு

உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான்

விடை – ஊசி

காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை

விடை – ஈ

ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

விடை – துடைப்பம்

கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?

விடை – மின்விசிறி

நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?

விடை – அன்னம்

கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும்

விடை – தேனீ

ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?

விடை – எறு‌ம்பு

வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

விடை – நெருப்பு

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 23
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *