அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 27

கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?

விடை – சோளப்பொத்தி

மூன்றெழுத்துப் பெயராகும் முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?

விடை – பஞ்சு

கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை

விடை – சட்டை

கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?

விடை – கரும்பு

மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?

விடை – ஒட்டகம்

பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான்

விடை – வானொலிப் பெட்டி

சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?

விடை – கொசு

நான்தான் சகலமும் என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன் நான் யார் ?

விடை – காற்று

கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன?

விடை – தேங்காய்

முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?

விடை – அஞ்சல் தலை

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 26
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *